Search This Blog

காலை ஜபம்

 இன்று காலை நான் ஜெபிக்கிறேன்

(தி ஆர்த்தா நான் கைதீல்)

இன்று காலை என் அடுப்பில் தீ மூட்டும்போது,

கடவுளின் அன்புச் சுடர் என் இதயத்தில் எரியட்டும்,

இன்று சந்திக்கும் அனைவரின் இதயங்களிலும் எரியட்டும் என்று ஜெபிக்கிறேன்.

பொறாமையோ தீய எண்ணமோ,

வெறுப்போ அச்சமோ அந்தச் சுடரை அணைக்காதிருக்கட்டும்.

அலட்சியமும் உணர்ச்சியின்மையும்,

அவமதிப்பும் பெருமையும்

குளிர்ந்த நீரைப் போல நெருப்பை அணைக்காதிருக்கட்டும்.

மாறாக கடவுளின் அன்பின் தீப்பொறி

என் இதயத்தில் அன்பை மூட்டட்டும்,

நாள் முழுவதும் பிரகாசமாக எரியட்டும்.

தனிமையில் உழலும்வர்களை நான் சூடேற்றட்டும்,

குளிர்ந்த உயிரற்ற இதயங்களை

கடவுளின் அன்பின் ஆறுதலால் நிரப்பட்டும்.